அம்மா

நான் இட்டிருக்கும் கட்டளை அதன் அறிவிப்புகள் ஐந்து தமிழ் வார்த்தைகளுக்கு மிகாமல், உச்சரிப்பு சுத்தத்துடன் என்னைச் சிரிக்கவோ, சிந்திக்கவோ வைக்கும்படி அமைய வேண்டும்.

இணை

எல்லா க்வான்டம் எண்களும் ஒன்றாக இருந்தாலும், துகள் சுழலும் திசை இணைக்கு நேர் எதிராக இருக்கும். அதாவது ஒன்று வலமாகச் சுற்றினால் இணை இடமாகச் சுற்றும்.

இறைவர்க்கோர் பச்சிலை

மத்யம ஸ்தாயி மத்யமத்திலிருந்து தார ஸ்தாயி மத்யமம் வரை சஞ்சரித்துவிட்டுத் தார பஞ்சமத்தை எட்டுகையில் மீண்டும் மீண்டும் அவள் கேசத்தை விலக்கி உதடோடு உதடு பதித்து அத்துமீறுகையில் உணரும் மெல்லதிர்வை மீளுணர்வார்.

ஏழ்கடல்

ஐந்து மாதத்திற்குப் பிறகு நீங்கள் இங்கு வரும்போது பசுமை கொண்ட புல் வெளி நிறைந்து, மலர்கள் பூத்துக் குலுங்கி, மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனும் உருவாகி, ஈடன் தோட்டம் போல் காட்சியளிக்கும்.

கர்ப்பகிரகம்

நிணமும் ரத்தமுமென நனைந்த மண்ணை அள்ளி அள்ளி அவள் செய்து வைத்திருந்த கல்லில் ஆவேசமாகக் கொட்டினாள். அந்தக் கல் ஆண்குறியை ஒத்திருந்தது. அதன் கீழே யோனியின் நுழைவாயில் போன்ற அமைப்பு இருந்தது.

டைனோசர்

நினைத்ததைச்செய்யலாம், கேட்டதெல்லாம் கிடைக்கும். ரொம்ப மோசமில்லை. கடவுள் நிலை இல்லையென்றாலும் ராஜவாழ்க்கை தான். ஆனால் ஏனோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

என்றூழ்

நிலைகுத்தி நிற்கும் என் கண்களை உற்று நோக்கி, “உங்கள் கண்களில் தெரியும் தீராத தனிமையையும் வெறுமையையும் என்னால் முடிந்தவரை விலக்க முயல்வேன்…” என்றது.

நோய் முதல் நாடி

குழந்தையோட வாழ்நாள் ஆரோக்கியத்துக்கான எல்லா பரிந்துரைகளுக்கும் டிரீட்மெண்ட் தேர்வுகளுக்கும் ஜீனோம்ல உள்ள ரெலவண்ட் இன்ஃபர்மேஷனையும் கன்ஸிடர் பண்ணனும்னு இந்தச் சட்டத்தோட முதல் ஷரத்து சொல்லுது.

பகுதாரி

நீ சில ஸ்வரங்களோட ஒரு பாட்டைப் பாடினா அதே ராகத்தை அடித்தளமா எடுத்துக்கிட்டு அந்த ராகத்தோட பிரயோகத்துல சில மாற்றங்களைச் செய்து அந்த சாப்ட்வேர் திரும்பப் பாடும்.

தான்தோன்றி

லீலா யோனியற்றவள், முலைகளற்றவள், நாபிக்கமலம‌ற்றவள். சொல்லப் போனால் உருவம் கூட அற்றவள். ஆனால் மகத்தான மூளை கொண்டவள். அந்த முரண்தான் அவளை வசீகரமானதாக்குகிறது.

மின்னு

மின்னு வருத்தப்படும் போதெல்லாம் அவள் தன்னைத் தொடர்பு நிலையில் இருந்து விலக்கிப் பூட்டிக்கொண்டு நீண்ட தூக்கத்தை எடுத்துக்கொள்வாள். உட்கார்ந்த இடத்திலிருந்தே ஒரு விடுமுறைப் பயணம் போவது போல.

கடவுளும் கேண்டியும்

“சரி இதுவரைக்கும் வந்தாச்சு அந்த நியூரோ மாப்பையும் எடுத்துப் பாத்துருவோமே,” என்று கடவுள் கூறக் கடவுளின் தலைமீது ஹெல்மெட்டைப் போலிருந்த ஒரு சாதனத்தைக் கேண்டி பொருத்தினான்.