அந்நியர்கள்

வெங்கோடையில் முன்னறிவிப்பின்றிப் பதற்றத்துடன் விண்ணிலிருந்து வீழும் சிறு சிறு கற்களெனக் கோபத்துடன் வரும் ஆலங்கட்டி மழையைப் போல அந்த முதல் அறிகுறி வெளிப்பட்டது.

நீச்சல் குளம்

அழிந்துவிட்ட அனைத்துமே இன்று உயிரோடிருந்தால், அது உன்னைக் குற்ற உணர்விலிருந்து விடுவிக்கலாம். ஆனால் நீ அவைகளை அழிக்கும் குற்றவாளியாக இருப்பாய்.

கயிற்றரவு

இந்தப் பலதரப்பட்ட உலகங்கள் மேலதான் நாம தினமும் சவாரி செஞ்சுகிட்டு இருக்கோம். நீங்க மட்டும் ஏன் ஒத்தை ஆளா, ஒத்தைச் சத்தியத்தோட உங்களையே முடக்கிக்கிட்டு இருக்கிங்க?

தூமை

‘நமக்கே நமக்குக் கருப்பை’, ‘நான் வயிற்றில் சுமந்த பிள்ளை’ – இந்த உணர்வு மயிரு மண்ணாங்கட்டி கதையெல்லாம் ஆண்கள் செய்யும் தந்திரம்.

ஒளி நிறைந்தவர்கள்

இப்படி எத்தனையோ கற்பனைக் கற்களை வான் நோக்கி விட்டெறியலாம்தான். ஆனால் எந்தக் கல்லை வானே கொண்டுவிடும்? மொத்தமும் நம்மீதே அல்லவா விழுந்துவிடும்.

திரும்பிச் செல்லும் நதி

மேகத்தில் அரசாணையை எழுதுவது, ஒரு சிறு கோள் அளவிற்கு கட் அவுட் வைத்துக்கொள்வது, பழங்காலக் கடவுள் படங்களைப் போலத் தனக்குத் தானே ஒளிவட்டம் மாட்டிக்கொள்வது என்று ஆரம்பித்துவிட்டானுகள்.

அழிபசி

அலைகளெல்லாம் உடல்களாய்த் தெரிந்த போதிலும் எட்ட கைநீட்டினால் தொட்டுப் பிடித்தாடுவது போல விலகிக்கொண்டு மிதந்தோடுவர். பசிக்கப் பசிக்கக் கைநீட்டுவேன். வெறுமை மட்டுமே கையில் அகப்படும் கொடூரக் கனவுக்கடல்.

தான்தோன்றி

லீலா யோனியற்றவள், முலைகளற்றவள், நாபிக்கமலம‌ற்றவள். சொல்லப் போனால் உருவம் கூட அற்றவள். ஆனால் மகத்தான மூளை கொண்டவள். அந்த முரண்தான் அவளை வசீகரமானதாக்குகிறது.

கடவுளும் கேண்டியும்

“சரி இதுவரைக்கும் வந்தாச்சு அந்த நியூரோ மாப்பையும் எடுத்துப் பாத்துருவோமே,” என்று கடவுள் கூறக் கடவுளின் தலைமீது ஹெல்மெட்டைப் போலிருந்த ஒரு சாதனத்தைக் கேண்டி பொருத்தினான்.

பல்கலனும் யாம் அணிவோம்

ஆல்ஃபாக்கள் நம் பிரக்ஞையைப் பிரதி எடுக்கத் தெரிந்துகொண்டால் எதிர்காலத்தில் என்ன ஆவோம் என்ற கேள்வியைவிடத் தேவையில்லாத நனவிலி என ஒரு சிலரை விலக்கத் தொடங்கினால் அம்மனிதர்களின் உபயோகம் என்ன எனும் கேள்வி அதிக அச்சத்தைத் தந்தது.