இதழ் 5

நேர்காணல்

சமகாலக் கவிதைகள்: கவிஞர் வெய்யிலுடன் ஓர் உரையாடல்

அரூ குழுவினர்

கவித்துவம், கலாரசனை, கலாபூர்வம் போன்ற வார்த்தைகளை மீண்டும் நாம் உலைக்களத்தில் இட்டுப் பரிசீலிக்க வேண்டும்.

மோபியஸும் மெட்டல் ஹர்லண்ட்டும்: ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுடன் ஓர் உரையாடல்

அரூ குழுவினர்

என்னைப் பொறுத்தவரை மோபியஸ் பிக்காசோவுக்கு நிகரானவர்.

கிராஃபிக் நாவல்கள்: க்வீ லீ சுவியுடன் ஓர் உரையாடல்

அரூ குழுவினர்

வகுப்பைக் கவனிக்காமல் பாடப்புத்தகங்களின் ஓரங்களில் ஏதாவது கிறுக்கிக்கொண்டிருக்கும் மாணவர்களே பிற்காலத்தில் கிராஃபிக் கலைஞர்கள் ஆகிறார்கள்!

கட்டுரை

கவிதையின் மதம் – 1: மகாநதியும் கடலும்

தேவதேவன்

கவிதையைப் பற்றி நாம் பேச நினைக்கிறோம். கவிதையைப் பற்றிப் பேசத் தகுதியான ஒரே நபர் கவிதைதான்.

அறிவிலுமேறி அறிதல் – 1

வேணு வேட்ராயன்

முடிவிலி இழைகொண்டு அந்தரவெளியில் பின்னிய வலைமீது தொடநினைக்கையில் உதிரும் பனித்துளிகளென எண்ணங்கள்.

‘க்வைதான்’ (1964) – கோபயாஷி எனும் ஜப்பானிய ஆன்மா

பிரதீப் பாலு

குழந்தைகள் மற்றும் பெண்களின் அகால மரணம் போலொரு வீரியமிகு பேய்க் காரணி எதுவுமுண்டா? உலகின் அனைத்துக் கலாச்சாரங்களிலும் பெண்கள்/குழந்தைகளின் அகால மரணம் உருவகப்படுத்தாத பேய்ப்புனைவுகள் என்று எதுவும் இருக்கமுடியாதுதானே!

நீளும் எல்லைகள் – 1: விசும்பு – அறிதலின் தொடக்கத்தில்

சுரேஷ் பிரதீப்

அறிவியல் புனைவுக்குத் தொல்பழங்காலம் அல்லது மர்மம் என்கிற அம்சங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்ற கேள்வியில் இருந்து தொடங்கலாம்.

புனைவின் நிழல் விளையாட்டுகள்

கோ.கமலக்கண்ணன்

உர்சுலா லே க்வின்னின் இரவின் மொழி (Language of the Night) கட்டுரைத் தொகுப்பை வாசிக்கையில், சங்கக் கவிதைகளின் காட்சியின்பம் இருக்கும் அதே நேரத்தில் தனித்த ரேகைகள் கொண்ட உள்ளங்கைகள் போல மாறுபட்டு இருக்கும் ஒரு மாயபட்டறையைச் சுற்றுலா செய்தது போல இருந்தது.

தானோஸ் (எ) தானடோசேஷ்வரன்

இயந்திரக் கவி

பாதி உயிரினங்களை அழித்துப் பேரண்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தானோஸ்ஸிற்கு வருவதற்குக் காரணம் இந்த மரண நங்கைதான்.

சிறுகதை

ப்ரோதேஸ்

கே.பாலமுருகன்

இங்கிருந்து தப்பிக்க வேண்டும். பித்துப்பிடித்த இந்நகரத்தின் கொடூர வாயிலிருந்து எச்சிலாக ஒழுகியோடிவிட வேண்டும்.

களப எயிறு

உமா கதிர்

மிக நிச்சயமாக நானேதான் இப்படத்தை வரைந்திருக்க முடியும். அதெப்படி இந்த ஓவியம் வரைந்ததாக நினைவின் ஒரு துளிகூட இல்லாமல் போனது.

வெற்றுக் கணங்கள்

சிரில் வாங்

மேல் நெற்றியில் துளிர்த்த வியர்வையில் டுடுங் கொஞ்சம் சரிந்து கண்களை மறைக்க, இது நிச்சயம் கனவில்லை என்று ஆயிஷா தனக்கே சொல்லிக்கொண்டாள். கனவில் யாருக்கும் வியர்க்குமா என்ன?