தான்தோன்றி

லீலா யோனியற்றவள், முலைகளற்றவள், நாபிக்கமலம‌ற்றவள். சொல்லப் போனால் உருவம் கூட அற்றவள். ஆனால் மகத்தான மூளை கொண்டவள். அந்த முரண்தான் அவளை வசீகரமானதாக்குகிறது.

ஒரு பூனையின் சுயசரிதை

இருள் சில சமயம் அதன் தனிமை குறித்தோ அல்லது அவனைப் போல் இல்லாமல் மற்றவர்கள் அதை நேசக் கரம் நீட்டாமல் அலட்சியப்படுத்தும்போதோ ஒருபாடு அவனிடம் புலம்பித் தீர்த்துவிடும்.

கடந்தகாலத் தொட்டில்

நான் கடந்த காலத்திலிருந்து நடந்தே வந்து கொண்டிருந்தேன். அவன் எனக்காக எதிர்காலத்தில் காத்திருப்பதாகச் சொன்னான். இன்னும் எத்தனை நேரம்தான் இப்படியே நடப்பது? பாதங்கள் கனக்கின்றன.

வட்டப்பாதை

ஒரு இலையை ஒளித்து வைக்கச் சரியான இடம் கானகம் தான் என்பதைப் போல அத்தனைக்குள்ளும் வியாபித்திருப்பதன் மூலம் காலம் தன்னை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது.

ஈறிலி

அது வலியைக் கொண்டாடும் சடங்கு. வலியோடு வாழவே மனிதம் விருப்பப்படுவது விந்தை. ஏதோ ஒரு வகையில் அவர்களது முடிவுகளை உருவாக்கும் அவர்களது உந்து சக்தி அந்த வலியாகத்தான் இருக்கக்கூடும் என்று எண்ணத் துவங்கியிருந்தேன்.

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி

பெண்ணாட்சி இல்லா வீடு பொலிவிழந்து கெடும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆண் அடங்கி பெண் ஆண்டால்தான் அது வீடு. நீ கண்ட கதைகளைப் படித்துவிட்டு என்னை ஓர் ஆணாக இருக்க விடுவதில்லை. சில வேளைகளில் பெண்ணுக்குரியதையும் செய்ய வைக்கிறாய்.

மின்னு

மின்னு வருத்தப்படும் போதெல்லாம் அவள் தன்னைத் தொடர்பு நிலையில் இருந்து விலக்கிப் பூட்டிக்கொண்டு நீண்ட தூக்கத்தை எடுத்துக்கொள்வாள். உட்கார்ந்த இடத்திலிருந்தே ஒரு விடுமுறைப் பயணம் போவது போல.