நேர்காணல்: ரவிசுப்பிரமணியன்

நாம் விரும்புகிற ஒரு கலையை ஆழமாக உள்வாங்கி, சிலிர்க்கிற, குதூகலிக்கிற மனதும் ரசனையும் நமக்கு இருந்தால் போதும். அப்படி ஓர் ஏகாந்தத்தை அது கொடுத்துவிடும்.

நேர்காணல்: மிஷ்கின்

ஒரு வகையில் கவிதை எல்லா கலைகளையுமே மிஞ்சிவிடுகிறது. கவிதை வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொள்கிறது. ஆனால் வார்த்தைகளில் கவிதை இல்லை.

நேர்காணல்: கணேஷ் பாபு – வெயிலின் கூட்டாளிகள்

எனக்கு நானே எதையோ சொல்ல வேண்டியிருந்தது. நான் எனக்கு என்ன சொல்ல வருகிறேன் என்று தெளிவாகத் தெரிந்துகொள்வதற்குத்தான் எழுதியபடி இருக்கிறேன்.

நேர்காணல்: கமலக்கண்ணன் – மொழிபெயர்ப்பு நூல்கள்

பள்ளிப் படிப்பில் இருந்தே பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான ஈடுபாட்டுடன் இருந்ததால் சொற்களின் சந்தம் என்னை எப்போதும் கற்கவும் மகிழவும் வைத்திருக்கிறது.

நேர்காணல்: எஸ்.ராமகிருஷ்ணன்

வயதும் அனுபவமும் வாசிப்பும்தான் என் கதைகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கான முக்கிய காரணம் என்பேன். நாவலை விடவும் சிறுகதையே மிகவும் சவாலான வடிவம். இன்றும் ஒரு புதிய சிறுகதை எழுதுவது சவாலான விஷயமே.

தேரியாள் மண்விலங்கு: நாடகக் கலைஞர் முருகபூபதியுடன் ஓர் உரையாடல்

இசை, பனுவல், நிலம், நாடக உடலிகள், பார்வையாளர்கள் என அனைத்தும் பிணையும் இழையாகையில் நாடகம் நிறைவை ஒட்டிய நிலையை அடைகிறது.

நேர்காணல்: நாஞ்சில் நாடன்

மொழியின் சகல சாத்தியங்களையும் பயிற்சி செய்பவன், பரிசீலிப்பவன், யோசிப்பவன் படைப்பிலக்கியவாதி. படைப்பிலக்கியவாதிதான் அடுத்த தலைமுறைக்கு மொழியைக் கடத்துகிறான்.

சிறார் இலக்கியமும் விளையாட்டுகளும்: இனியனுடன் ஓர் உரையாடல்

சிறார் இலக்கியம், அதில் அரசியல் சரிநிலை, குறிப்பிடத்தகுந்த முன்னெடுப்புகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், குழந்தை வளர்ப்பு என இனியனுடன் நீள்கிறது இவ்வுரையாடல்.

மீம் எனும் கலை: மனோ ரெட்டுடன் ஓர் உரையாடல்

மீம்கள் உருவாக்குவதன் சவால்கள், மீம் மூலம் கதை சொல்லுதல், இலக்கிய மீம்கள், மீம் மாஸ்டர்கள் மற்றும் மீம்களின் வற்றாத ஊற்றாகிய நமது வடிவேலு குறித்துப் பேசுவோம், மனோ ரெட்டுடன்.

நேர்காணல்: சாரு நிவேதிதா

இலக்கியம் என்றால் சிடுக்கு மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதே எதார்த்தத்துக்கு விரோதமாக, பொய்யாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம்தான்.

நேர்காணல்: எழுத்தாளர் இராம. கண்ணபிரான்

இலக்கியத்திற்குத் தேவைப்படும் படைப்புக் கற்பனை (creative imagination), நனவு மனமும் (conscious mind) நினைவிலி மனமும் (unconscious mind) சார்ந்தது. அது எல்லைகள் (limits, boundaries) அற்றது.

நேர்காணல்: அய்யனார் விஸ்வநாத்

தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் மானுட வாழ்வை தங்களின் கூர்மையான பார்வையின் மூலம், நுண்ணுணர்வின் மூலம் படைப்புகளாக மாற்றும் எழுத்தாளர்கள் எல்லையில்லா திறப்புகளைக் கொண்டிருக்கும் அறிவியல் புனைவின் பக்கம் ஏன் வரத் தயங்குகிறார்கள் என்பது புரியவில்லை.

சமகாலக் கவிதைகள்: கவிஞர் வெய்யிலுடன் ஓர் உரையாடல்

கவித்துவம், கலாரசனை, கலாபூர்வம் போன்ற வார்த்தைகளை மீண்டும் நாம் உலைக்களத்தில் இட்டுப் பரிசீலிக்க வேண்டும்.

கிராஃபிக் நாவல்கள்: க்வீ லீ சுவியுடன் ஓர் உரையாடல்

வகுப்பைக் கவனிக்காமல் பாடப்புத்தகங்களின் ஓரங்களில் ஏதாவது கிறுக்கிக்கொண்டிருக்கும் மாணவர்களே பிற்காலத்தில் கிராஃபிக் கலைஞர்கள் ஆகிறார்கள்!