சாத்தானின் மொழியில் தெய்வத்தின் குரல்கள்

இந்த நாவல் முழுவதும் மரபுக்கும், நவீனத்திற்கும் இடையே சுழன்று சுழன்று, கதாநாயகன் மாலி எனும் மகாலிங்கம் பந்தாடப்படுகிறான். அந்த உளமயக்கும் உளைச்சலும் வாசிக்கும் நமக்கும் தொற்றித் தொடர்ந்து இறுதிவரை வருகிறது.