கவிதை

நடை பயிலும் காற்று

< 1 நிமிட வாசிப்பு

வயது குறைந்த மரத்தின்
ஊசிக் கிளைகளில்
முதற் தடவையாக தொடை நடுங்கியபடி
சிறு குழந்தையைப்போல்
நடை பயில்கிறதோர் காற்று
கிளைகளின் ஓயாத பேயாட்டம்
அதனைப் பறைசாற்றுகிறது
அது மரத்தின் காலடிக்கும்
கிளைக்குமிடையிலான தூரத்தை
இடைக்கிடை கண்களால் அளந்து கணிக்கையில்
நெஞ்சு பதைபதைத்துக் கிலியுறுகிறது
அதன் பதட்டம் அதிகரித்து
கால் இடறி விழுகையில்
இலையின் நுனியைப் பிடித்து
அந்தரத்தில் தொங்குகிறது
பழுத்த இலையாக இருந்திருந்தால்
காற்று இன்னேரம்
காம்போடு கழன்று விழுந்து
குற்றுயிராய்க் கிடந்திருக்கும்
அல்லது செத்து மடிந்திருக்கும்
சம்பவத்தைக் கிளையின் மீது
ஓய்வெடுத்திருந்த பறவை
அவதானித்த மட்டில்
உடன் தனது றெக்கைகளைக் கொடுத்து
காற்றை மேலே தூக்கிவிடுகிறது
இப்போது மரத்தின் பசுமை மீந்த மடியில்
சம்மாரமிட்டு உட்கார்ந்திருக்கிறது
தப்பிப் பிழைத்த காற்று
அதன் உயிரைச் சேகரம் செய்த திருப்தியில்
கூட்டினுள் குஞ்சுகளை
அரவணைத்தபடி உறங்கும் பறவையின்
இறகுகளை இதமாகக் கோதிவிடுகிறது
இனி அனுபவமிக்க அப்பறவையின்
சிறகுகளைப் பற்றிப் பிடித்தபடி
காற்று நிதானமாக நடை பயின்று
தன் இலக்கைக் கண்டடையும்

ஜமீல்

இலங்கையைச் சேர்ந்த இவர் 1990களிலிருந்து இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். இதுவரை ஏழு கவிதைப் பிரதிகளை வெளியீடு செய்திருக்கிறார். அவரது பிரதிகளுக்கு விருதுகளும் சான்றுதல்களும் கிடைத்திருக்கின்றன. 2016ஆம் ஆண்டு மதுரை நகரில் ’தாளில் பறக்கும் தும்பி’ நூலிற்காக ஒன்றரை லட்சம் ரூபாய்ப் பரிசும் கேடயமும் பெற்றுக் கொண்டதனைத் தனது எழுத்திற்குக் கிடைத்த அதியுன்னத அங்கிகாரமாகக் கருதுகிறார். ஓவியத்திலிருந்து வெளியேறும் நிறம் 2018இல் வரவிருக்கின்ற பிரதியாகும்.

Share
Published by
ஜமீல்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

1 year ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

1 year ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

1 year ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

1 year ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

1 year ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

1 year ago