பறத்தல்

இருளுக்குள் எல்லாமும் இருக்கின்றன. அதைக் கண்கள் கொண்டு பார்க்க இயலாது எனத் தெரிந்து கொண்ட கணத்தில் மனத்தைக் கொண்டு கற்பனை செய்யத் துவங்கிவிட்டேன். கண்களைக் காட்டிலும் மனம் ஆயிரமாயிரம் காட்சிகள் உடையது.

சாடோங்

கைகளை விரித்துக் காட்டி நடனம் தன்னை ஒவ்வொருமுறையும் விடுதலை செய்கிறது எனச் சொல்லிப் பரவசப்படும்போது அவளது கண்களில் என்னுடைய பரந்தவெளியையும் உணர்ந்தேன்.

சக்கர வியூகம்

அங்கு நிற்கும் அவன் செத்து வீழ்ந்து சில நாள்களில் அவன் பெயர் தெரிய வரும்போது மண்டியிட்டு இறைவனிடன் இவனுடைய பெயரைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்கிற சிந்தனை சட்டென தர்மாவின் மனத்தில் தோன்றியதும் துப்பாக்கியைக் கீழறக்கி வெகுநேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மூக்குத் துறவு

“இப்ப காத்து இருக்குத்தானே?” என்றவாறு கைகளை இரு பக்கமும் வீசினேன். ஒன்றுமற்ற ஒரு வெளிக்குள் கைகள் அசைந்து கொண்டிருப்பதைப் போன்று தோன்றியது.